2026 ஜூலை
திறந்த கிணறு பாதுகாப்பு — மேலப்புதுக்குடி
குழந்தைகள் நடமாடும் இடத்தில் மூடப்படாத கிணறு. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலருக்கு அவசர மனு.
நிலுவையில்
சமூக ஆர்வலர் · சேரன்மகாதேவி வட்டம், திருநெல்வேலி
உங்கள் ஊரின் பிரச்சினையைத் தேடுங்கள். மனு உதவி இலவசமாகப் பெறுங்கள். தாக்கல் செய்யப்பட்டவற்றின் நிலையைப் பாருங்கள்.
சேவைகள்
நான்கில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். எல்லாமே இலவசம்.
35 உள்ளாட்சி அமைப்புகளின் 467 பதிவுகளைத் தேடுங்கள். ஊர் பெயரைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்யலாம்.
தேடத் தொடங்கஎந்த அலுவலகத்தில் கேட்பது, என்ன எழுதுவது, பதில் வராவிட்டால் என்ன செய்வது — முழு வழிகாட்டி.
வழிகாட்டியைப் பார்க்கதாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு மனுவும் தேதி, அலுவலகம், நிலையுடன். நிலுவையிலிருப்பதும் இங்கே உண்டு.
பதிவேட்டைப் பார்க்கமேலப்புதுக்குடியில் நேரில் வந்து சந்திக்கலாம். எழுதத் தெரியாவிட்டால் நானே எழுதித் தருகிறேன்.
முகவரியைப் பார்க்க
மக்கள் சேவை மையம்
மனு எழுதத் தெரியவில்லை என்பதற்காக உரிமையை விட்டுவிடக் கூடாது. சொன்னதைக் கேட்டு நானே எழுதுகிறேன், படித்துக் காட்டுகிறேன், பிறகுதான் கையெழுத்து.
மேலப்புதுக்குடி, புதுக்குடி, சேரன்மகாதேவி ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டம்.
பணிப் பதிவு
ஒவ்வொரு மனுவுக்கும் அலுவலக ஒப்புகைச் சீட்டு உண்டு. கேட்டால் காட்டுவேன். நிலுவையில் இருப்பதை நிலுவை என்றே எழுதியிருக்கிறேன்.
2026 ஜூலை
குழந்தைகள் நடமாடும் இடத்தில் மூடப்படாத கிணறு. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலருக்கு அவசர மனு.
நிலுவையில்
2026 ஜூலை
பழுதடைந்த குடிநீர்த் தொட்டி. விழும் அபாயம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
நிலுவையில்
2026 ஜூலை
2013–14 முதல் மின்சாரம் இல்லாத வீடு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மின் நுகர்வோர் உரிமை விதிகள் 2020 அடிப்படையில் 17 பக்க மனு.
நிலுவையில்
2026 ஆகஸ்ட்
நடைமுறை மூலதனத் திட்டங்கள், அனுபவச் சான்றிதழ், வங்கி இணைப்பு — முழு வழிகாட்டுதல்.
முடிந்தது
ஊர் வாரியாக
அம்பாசமுத்திரம் தொகுதியின் 35 நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு 467 பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுத் தளங்கள், டெண்டர் ஆவணங்கள், நகர்மன்றக் குறிப்புகள், நீதிமன்ற மற்றும் NGT பதிவுகள், செய்தி அறிக்கைகள், நேரடிக் கள ஆய்வு — இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.
குடிநீர், சாலை, வடிகால், விவசாயம், தெருவிளக்கு, கல்வி என வகை வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள் வேண்டுமென்றே சேர்க்கப்படவில்லை.
என்னைப் பற்றி
மலையான்குளத்தில் பிறந்தேன். புதுக்குடியில் குடும்பம். நெதர்லாந்திலும் இத்தாலியிலும் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்தேன்.
அங்கே ஒரு விஷயத்தைக் கவனித்தேன். மக்கள் கட்டும் வரிப்பணம் எங்கே போகிறது என்பதை அந்த நாட்டு மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கேள்வி கேட்டால் பதில் வரும், கால அவகாசமும் இருக்கும்.
நம் ஊரில் மனு கொடுத்தால் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. அது நம் மக்களின் குறை அல்ல — யாரும் சொல்லித் தரவில்லை. அதைச் சொல்லித் தருவதற்காகத் திரும்பி வந்தேன்.
மக்களிடம் ஒரு ரூபாய் கட்டணம் இல்லை.
கட்சிப் பாரபட்சம் இல்லை. மனு ஒரு உரிமை, உதவி அல்ல.
ரசீது இல்லாத மனு இல்லை.
மனு கொடுத்தவர்களின் விவரம் எந்த அரசியல் தேவைக்கும் பயன்படுத்தப்படாது.
சமூக வலைதளங்கள்